கோவையில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயம்

published 2 years ago

கோவையில் கல்லூரி மாணவி உள்பட 4 பேர் மாயம்

கருமத்தம்பட்ட,  ஜூன்.4- கருமத்தம்பட்டி அடுத்த சாமளாபுரம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 38). இவரது மகள் சந்தியா (19). இவர் சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று சந்தியா கல்லூரி செல்வதாக  கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது பெற்றோர் கல்லூரி, உறவினர் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து கலையரசன் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோன்று கருமத்தம்பட்டி அடுத்த சேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் சிவில் ராஜ்( 31). இவரது மனைவி டெய்சி (28). இவர்களது  மகள் சுசன் ஆன்ட்டி (5). டெய்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை  அழைத்து கொண்டு  வீட்டை விட்டு வெளியே சென்றார்.
ஆனால் இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அகஸ்டின் சிவில் ராஜ் கருமத்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின் அளித்தார். போலீசார்  வழக்கு பதிவு செய்து மாயமான தாய்- மகளை தேடி வருகின்றனர்.
இதேபோன்று ஆலாந்துறையை சேர்நதவர் பிரியா (22). சம்பவத்தன்று பிரியா வீட்டில் நேர்முக தேர்வுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் கிடைக்கவில்லை அதையடுத்து அவரது தந்தை ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாக்குப்பதிவு செய்து மாயமான பிரியா தேடி வருகின்றனர்.
அன்னூரை சேர்ந்தவர் அமிர்தவள்ளி (32). சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் அன்னூர் போலீசார் அமிர்தவள்ளியை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe