கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் போடப்போகிறது தானியங்கி கருவி..!

published 1 year ago

கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் போடப்போகிறது தானியங்கி கருவி..!

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக கோவை மாநகரில் அவினாசி ரோடு, சக்தி ரோடு, மற்றும் பாலக்காடு ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்து உள்ளனர். 

இதில் முதல் கட்டமாக கோவை-அவினாசி ரோட்டில் இந்தகருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 40 கி.மீ. வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு,

 அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் தானியங்கி வேக கட்டுப்பாடு அளவீடடு கருவிகள் பொருத்தப்படுவது வழக்கம். 

ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe