கோவையில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

published 1 year ago

கோவையில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கோவை: கோவையில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோவை போத்தனூர் என்பி இட்டேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டைகளுடன் வந்த 4 பேரை மடக்கி விசாரித்தனர். 

அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் கொண்டு வந்த மூட்டையை போலீசார் பிரித்து பார்த்த போது அதில், பாக்கெட், பாக்கெட்டுகளாக ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. 
இதனையடுத்து போலீசார் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். 

அதில், குட்காவை விற்பனைக்காக கடத்தி சென்றது குனியமுத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த டீக்கடை ஊழியர் ராஜீவன்(42), சுந்தராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்த மகேஷ்குமார்(25), தியாகி குமரன் தெருவை சேர்ந்த டீமாஸ்டர் ராதாகிருஷ்ணன்(46), குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த உமர் முக்தார்(29) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe