பீளமேட்டில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனைத் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கும்பல்

published 1 year ago

பீளமேட்டில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனைத் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கும்பல்

கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனை தாக்கி செல்போன் பறித்துத் தப்பிய 6 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் இப்ராஹிம் மகன் முகமத் அமீர்(15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய முகமத் அமீர் தனது நண்பர்களுடன் பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் முகமத் அமீரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் இல்லை என்று சொன்னதால் ஆத்திரமடைந்த கும்பல் உருட்டு கட்டையால் முகமத் அமீரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தாக்கி செல்போன் பறித்து சென்ற கும்பலைத் தேடி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe