போத்தனூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

published 1 year ago

போத்தனூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டு விழா  காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்

கோவை: கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதனைக் காணொலி காட்சி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள்  அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் துவக்கி வைக்கிறார்.

 இந்த நிகழ்ச்சியில் ரயில்வே துறை அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe