பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்- வாலிபர் கைது மனைவி மீது வழக்கு…

published 13 hours ago

பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்- வாலிபர் கைது மனைவி மீது வழக்கு…

கோவை: கோவை நஞ்சம்மாள் நாயுடு லே-அவுட்டை சேர்ந்தவர் புஷ்பராஜன்(48). இவர் சிங்காநல்லூர் நஞ்சப்பாநகர் திருச்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று முன்தினம் புஷ்பராஜன் காரில் பெட்ரோல் பங்க் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் முன்பு ஒரு ஆட்டோ நின்றிருந்தது. அந்த ஆட்டோவை நகர்த்தி வழிவிடுமாறு புஷ்பராஜன் கேட்டார். இதில் ஆட்டோவில் இருந்த முகமத் ஆசிக்(45), அவரது மனைவி ஆகியோர் புஷ்பராஜனிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஆத்திரமடைந்த முகமத் ஆசிக் மற்றும் அவரது மனைவி இருவரும் புஷ்பராஜனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர். இந்த காட்சிகள் பெட்ரோல் பங்க்-ல் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. 

இது சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து புஷ்பராஜன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த முகமத் ஆசிக் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மனைவி ஆயிஷா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe