மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மனு

published 1 year ago

மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மனு

கோவை: மருத்துவர் சமூகத்தினருக்குச் சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக  நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

சூலூர் வட்டம் எஸ்.குமாரபாளையம் கிராமம் மலையடிபாளையம் கிராமத்தில் எங்கள் சமூகத்திற்குச் சொந்தமான பொதுமடம் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கு முன் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மடத்தின் ஒரு பகுதி நிலத்தைத் தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே அந்த நிலத்தை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe