அதிக லாப ஆசை காட்டி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 42 லட்சம் மோசடி…

published 12 hours ago

அதிக லாப ஆசை காட்டி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 42 லட்சம் மோசடி…

கோவை: கோவை கணபதி பொதிகை நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவருக்கு சமீபத்தில் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிவக்குமார் அதன் லிங்க்-ஐ கிளிக் செய்து தனது விவரங்களை பதிவு செய்தார். அதன்பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது எப்படி? என விளக்கினார். இதனை தொடர்ந்து சிவக்குமார் அந்த நபர் கூறியபடி ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 42 லட்சம் அனுப்பினார். 

ஆனால் மர்ம நபர் கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. தனது முதலீட்டு பணமும் திரும்ப கிடைக்கவில்லை. மொத்தமாக ரூ. 42 லட்சம் மோசடி செய்து விட்டனர். மீண்டும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இது குறித்து சிவக்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe