திருப்பூரில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

திருப்பூா் : திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ்  சுற்றுலா தொழில் முனைவோருக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தகுதியான சுற்றுலா தொழில்முனைவோர் இந்த சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா தொழில்முனைவோருக்கு இந்த சுற்றுலா விருதினை வழங்கி வருகிறது.

இந்த விருதானது மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும் நிறுவனங்களான சுற்றுலா இயக்குபவர்கள், விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விமான நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

 திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில்முனைவோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் https://tntourismawards.com/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக்  கடைசி நாள் ஆகஸ்ட் -  15 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe