கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய பெண் கைது

published 1 year ago

கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம்  நடத்திய பெண் கைது

கோவை : கோவையில் சில இடங்களில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, ஆந்திரா, மும்பையிலிருந்து பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்நிலையில், கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் நேற்று செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் நிலையத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் நீங்கள் மசாஜ் செய்த பின் கூடுதலாகப் பணம் கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என அழைப்பு விடுத்தார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபர் அங்கிருந்து வந்து செல்வபுரம் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை அங்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை மசாஜ் நிலையத்தில் விபசாரம் நடத்திய கணபதி லே-அவுட்டை சேர்ந்த மகேந்திரன் மனைவி சுபாஷினி(30) என்பவரைக் கைது செய்தனர். 

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கோவையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe