கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு

published 1 year ago

கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவில் திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார். இவருக்கு கே.ஜி., விதியில் உள்ள நகை பட்டறையில் சிறுவன் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவர் அங்குச் சோதனை நடத்தினர். அப்போது சுப்ரதாபால், 31, என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறையில் சிறுவன் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுவனை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமார் புகாரின் படி வெரைட்டி ஹால் ரோடு காவல்துறை சுப்ரதாபால் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe