கோவையில் அசாம் வாலிபரை தாக்கிய மூன்று பேர் கைது

published 1 year ago

கோவையில் அசாம் வாலிபரை தாக்கிய மூன்று பேர் கைது

கோவை : அசாமைச் சேர்ந்தவர் லுன்மின் தாங் கொன்சாய்(24). இவர் கோவை ரத்தினபுரி மருதகுட்டி தெருவில் வசித்து வருகிறார். ரேஸ்கோர்சில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தூய்மை வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வேலை முடிந்து அவர் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவில் 3 இளைஞர்கள் சாலையில் நின்றிருந்தனர். 

அவர்களை ஓரமாக நிற்கும்படி லுன்மின் தாங் கொன்சாய் கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி லுன்மின் தாங் கொன்சாயை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதில் அவருக்குத் தலை, உதடு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அசாம் வாலிபரைத் தாக்கியது ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருண்(21), டிரைவர் சார்லஸ்(21), ராகுல்(20) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe