சரவணம்பட்டி அருகேயுள்ள கடையில் வெள்ளி, பணம் கொள்ளை

published 1 year ago

சரவணம்பட்டி அருகேயுள்ள கடையில் வெள்ளி, பணம்  கொள்ளை

கோவை  : கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத் (44). இவர் அந்த பகுதியில் சேலை மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த 5.750 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகிவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

 கடைக்கு சென்ற சம்பத் மருமகன் அவர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe