போளுவாம்பட்டி வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய அடையாளம் தெரியாத ஆண் பிணம்

published 2 years ago

போளுவாம்பட்டி வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை, ஜூன்.13- கோவை ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் போளுவாம்பட்டி ரேஞ்சராக வேலை செய்து வருபவர் ராமநாதன் (58). இவருக்கு வனப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மரத்தில் தொங்கியவாறு இருந்தது.

இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாகத் தொங்கிய ஆணின் உடலை மீட்டு சோதனை செய்தனர். அதில் அவர் இறந்து 2, 3 நாட்கள் இருக்கலாம் எனத் தெரியவந்தது. பின்னர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேஞ்சர் ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் வனப்பகுதியில் பிணமாக இருந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் அங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோனங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் ஆண் பிணம் மரத்தில் தூக்குப்போட்டு தொங்கியவாறு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe