கோவையில் வீட்டில் ரூ. ஆயிரம் திருடிய வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் வீட்டில் ரூ. ஆயிரம்  திருடிய வாலிபர் கைது

கோவை: கோவை சாயிபாபா காலனி கேகே புதூர் ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சுதாகர்(50). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு வீட்டுக்குள் டேபிளில் வைத்திருந்த ரூ. 1000 பணத்தை நைசாக திருடி சென்று விட்டார். பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதாகர் இது குறித்து சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், பணம் திருடியது வேலாண்டிபாளையம் கந்தசாமி தெருவை சேர்ந்த தங்கராஜ்(27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe