கோவையில் இம்மாத இறுதி வாரத்தில் கல்விகடன் முகாம் - ஆட்சியர்

published 1 year ago

கோவையில் இம்மாத இறுதி வாரத்தில் கல்விகடன் முகாம் - ஆட்சியர்

கோவை: செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெற உள்ள மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாமிற்கு முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பொருட்டு 04.09.2023 முதல் 20.09.2023 வரையில் அனைத்து கலை மற்றும் அறிவியல் மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலேயே இ.சேவை மையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 15ம் தேதி  பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், 18ம் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள்  நடைபெற்று ஆவணங்கள் முறையாக சரிப்பார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருதிறது.

இம்முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேரவுள்ளதால். பொறியியல் கல்விபயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  

மேலும், வருகின்ற 22.09.2023 அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 26.09,2023 அன்று பொள்ளாச்சி. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 29.09.2023 அன்று ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவ மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இம்முகாமில் மாணவர்களுக்கு கல்விகடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடச் சான்றுகள் மற்றும் பான் கார்டு ஆகிய சேவைகளை பெற 04.09.2023 முதல் 20.09.2023 வரை இ.சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்விகடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு (Core Committee) மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளம் அறை எண்:16ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்வி கடன் வழங்கும் பணியினை மேற்பார்வை செய்யப்பட்டுவருகிறது.

எனவே, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் எதிர்வரும் 04.09.2023 முதல் 20.09.2023 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe