சென்னையில் நடைபெற உள்ள அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

published 1 year ago

சென்னையில் நடைபெற உள்ள அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

கோவை: சென்னையில் நடைபெற உள்ள அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நாளை அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அதிமுக செயலாளர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அமல் கந்தசாமி, உட்பட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe