தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தேசிய கைப்பந்து வீரர் உட்பட 3 பேர் கைது...

published 1 year ago

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தேசிய கைப்பந்து வீரர் உட்பட 3 பேர் கைது...

கோவை: தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தேசிய கைப்பந்து வீரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடையர்பாளையம் தேவாங்க நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(46). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபாகரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், பயந்து போன 3 பேரும் அங்கிருந்து பைக்கில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து பிரபாகரன் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பிரபாகரனிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தடாகம் ஆனைகட்டி ரோட்டை சேர்ந்த தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் சுதர்சன்(20), தனியார் கல்லூரி மாணவர்கள் தடாகம் ரோடு ராகவேந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த பாலகணேஷ்(18), தடாகம் இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீ பரத்(21) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe