எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்ற பெயரில் கோவையில் பெண்ணிடம் பணம் மோசடி

published 1 year ago

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்ற பெயரில் கோவையில் பெண்ணிடம் பணம் மோசடி

கோவை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா(43). இவர் கோவையை சேர்ந்த வினோத் என்பவரிடம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க தொடர்பு கொண்டார். அதற்கு ரூ. 80 ஆயிரம் விலை பேசப்பட்டது. முன்பணமாக மஞ்சுளா ரூ. 5 ஆயிரத்தை வினோத்தின் கூகுள் பே-வுக்கு அனுப்பினார்.

மீதம் உள்ள ரூ. 75 ஆயிரத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட வினோத் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மஞ்சுளாவிடம் விற்காமல் இருந்து வந்தார். பலமுறை மஞ்சுளா கேட்டும் பணத்தையும் வினோத் கொடுக்கவில்லை. இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe