ஐடி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு...

published 1 year ago

ஐடி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு...

கோவை: கோவையில் ஐடி ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை சேரன்மாநகரை வசிப்பவர் ரமேஷ்குமார்(36). ஐடி ஊழியர். இவர் கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரி சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ஒரு வாட்ச் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். 

இது குறித்து ரமேஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு கதவு, பீரோ உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியிருந்த கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe