கோவையில் குப்பை கொட்டியதை தட்டி கேட்ட மூதாட்டிக்கு அடி-உதை

published 2 years ago

கோவையில் குப்பை கொட்டியதை தட்டி கேட்ட மூதாட்டிக்கு அடி-உதை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை: கோவை அன்னூர் சோளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி சாந்தாமணி (வயது 65). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). விவசாயி. இந்த நிலையில் சம்பவத்தன்று சசிகுமார் தனது வீட்டுக் குப்பைகளை  சாந்தாமணியின் தோட்டத்தில் கொட்டினார். இதனை பார்த்த சாந்தாமணி அவரை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார், சாந்தாமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

காயம் அடைந்த அவர் வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.  அவரை மீட்டு குமாரபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து சாந்தாமணி அன்னூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe