மீண்டும் மூடப்பட்டது கோவை குற்றாலம்

published 1 year ago

மீண்டும் மூடப்பட்டது கோவை குற்றாலம்

கோவை: கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில்  நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால்  நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். 
நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியதால் கடந்த திங்கட் கிழமை முதல் மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது, இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe