கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை- பரபரப்பு கடிதம் சிக்கியது…

published 1 year ago

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை-  பரபரப்பு கடிதம் சிக்கியது…

கோவை: கோவை ரத்தினபுரி டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் தசரத் சந்து(38). இவர்  அப்பகுதியில் சீட் கவர் கடை  வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகளும், 1 மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஸ்வேதா(17). பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவருடைய தாய், தனது மகன், மகள்களை டியூசன் கொண்டு சென்று விட்டு வர சென்று விட்டார். ஸ்வேதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் அவரது தாயார் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். 

அப்போது ஸ்வேதா வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து கதறி அழுத அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஸ்வேதா அறையில் கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில்  அவர் 'பார்ன் டு வின், ஐ அம் அக்லி, ஐ அம் லூசர்' என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe