செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் குடிபோதையில் பெண்ணை தாக்கியவர் கைது...

published 1 year ago

செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் குடிபோதையில் பெண்ணை தாக்கியவர் கைது...

கோவை: கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ராணி (67). இவரது எதிர் வீட்டில் அப்துல் ரஹீம் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி குடிபோதையில் ராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல், நேற்று குடிபோதையில் இருந்த அப்துல் ரஹீம் மீண்டும் ராணியிடம் தகராறு செய்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி ராணியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். 

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராணியை மீட்டனர். அவர்களையும் மிரட்டி விட்டு அப்துல் ரஹீம் அங்கிருந்து ஓடி விட்டார். இது குறித்து ராணி செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து அப்துல் ரஹீமை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe