பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காந்திபுரம் விடுதியில் மாணவர் தற்கொலை

published 1 year ago

பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காந்திபுரம் விடுதியில் மாணவர் தற்கொலை

கோவை: பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு கோவை தங்கும் விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் கோஜிபுர் கேரியை சேர்ந்தார் வருண் சர்மா(20). இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி சத்தியில் உள்ள கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வருண் சர்மா தனது பெற்றோரிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் தனக்கு வாழபிடிக்க வில்லை தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனே விடுதி உரிமையாளருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர்.

அவர் உடனே விடுதி ஊழியர் ஒருவருக்கு போன் செய்து விவரத்தை சொல்லி அந்த மாணவரின் அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்த போது வருண் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe