போதை பொருள் தடுப்பு குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டம்...

published 1 year ago

போதை பொருள் தடுப்பு குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டம்...

கோவை: கோவையில் போதை பொருள் அதிகரித்து வருவதாக புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆய்வாளர்கள், இணை ஆணையர்கள்,துணை ஆணையர்கள்,உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களாக கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்கும் வகையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

வருகின்ற காலங்களில் போதை பொருள் விற்பனை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீறி விற்பனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுவார் என்று காவல் ஆணையர் எச்சரித்தார்.

போதைப் பொருள் புழக்கத்தினால் பல்வேறு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அடிமையாகி தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதினால் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe