உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்-துவக்கி வைத்த கோவை மேற்கு மண்டல ஐஜி...

published 1 year ago

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான்-துவக்கி வைத்த கோவை மேற்கு மண்டல ஐஜி...

கோவை: கோவையில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

உலக அளவில் உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த உடல் உறுப்பு தானம் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். சூலூர் பகுதியில் தொடங்கி அவினாசி சாலை வரை செல்லும் 16 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ,மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி உடல் உறுப்பு தானம் என்பது மிக அவசியமான ஒன்று உடல் உறுப்பு தானத்தை பொதுமக்கள் தானமாக கொடுக்க முன்வர வேண்டும் இது போன்ற மராத்தான் நடைபெறுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe