ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்ட சைக்கிளிங் போட்டி -துவக்கி வைத்த கோவை மாநகர காவல் துணை ஆணையர்…

published 1 year ago

ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்ட சைக்கிளிங் போட்டி -துவக்கி வைத்த கோவை மாநகர காவல் துணை ஆணையர்…

கோவை: ஏழை குழந்தைகளின் கல்விகளுக்கு நிதி திரட்டும் விதமாக கோவையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிளிங் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சமூகத்தில் பின் தங்கிய குழந்தைகளின் உள்கட்டமைப்பு மற்றும் அரசு பள்ளிக்கு நிதி திரட்டி அவர்களுக்கான உதவிகளை  ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஏழை குழந்தைகளின் கல்விகளுக்கு நிதி திரட்டும் விதமாக கோவை கொடிசியா வளாகத்தில் குழந்தைகளுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டிகளை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கல்வி பயில முடியாமல் ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த சைக்கிளில் போட்டியில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe