வேலைக்கு சென்ற இடத்தில் 5 பவுன் நகை திருடிய பியூட்டிசியன்...

published 1 year ago

வேலைக்கு சென்ற இடத்தில் 5 பவுன் நகை திருடிய பியூட்டிசியன்...

கோவை:கோவையில் வேலைக்கு சென்ற இடத்தில் 5 பவுன் நகை திருடிய பியூட்டிசியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் சித்திக் அகமத். இவரது மனைவி ரகமத் நிஷா(40). கடந்த 3 ஆண்டுகளாக இவரது வீட்டுக்கு பேரூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த சிவானி(26) என்ற பியூட்டிசியன் அடிக்கடி வேலைக்கு வந்து செல்வது வழக்கம். இதேபோல், கடந்த 2ம் தேதி சிவானி, ரகமத் நிஷா வீட்டுக்கு வந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் சென்று விட்டார். அதன் பின்பு வீட்டு அலமாரியில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடு போயிருப்பதை ரகமத் நிஷா கண்டார். உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரில் சிவானி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போத்தனூர் போலீசார் பியூட்டிசியன் சிவானி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe