கரும்புக்கடையில் போதை மாத்திரை…

published 1 year ago

கரும்புக்கடையில் போதை மாத்திரை…


கோவை: கரும்புக்கடை பகுதியில் சிலர் போதை மாத்திரை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று கரும்புக்கடை போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். சாரமேடு பகுதியில் உள்ள காலி நிலத்தில் நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.

அதில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்த போது அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சாரமேடு இலாகி நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மன்சூர் ரஹ்மான்(24), அவரது தம்பி அனீஷ் ரஹ்மான்(22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe