ஊட்டி மலை தொடர்ந்து ரத்து ; சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

published 1 year ago

ஊட்டி மலை தொடர்ந்து ரத்து ; சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

கோவை: ஊட்டி மலை ரயில் வரும் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வோர் ஒரு  முறையாவது மலை ரயிலில் சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுவர். மலை முடுக்குகளிலும், வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பாதையிலும் செல்லும் அனுபவத்திற்காகவே பலர் இந்த ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைப்பொழிவு காணப்படுவதால், வரும் 13ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe