ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் 6-வது அசன பண்டிகை

published 1 year ago

ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் 6-வது அசன பண்டிகை

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சி.எஸ்.ஐ. சகல பரிசுத்தவான்கள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 6-வது அசன பண்டிகை நேற்று நடைபெற்றது. 
 

இதில் கோவை திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆராதனை நடத்தினார். 

தொடர்ந்து அவர் அசன விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை 11 மணிக்கு அசன விருந்து வழங்கப்பட்டது. இதில் பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, உணவு அருந்தி சென்றனர். அசன விருந்தில் 5 ஆயிரம் பேருக்கு ஆட்டு இறைச்சி, கூட்டு, பொறியியல், ரசம், பாயசம் உள்ளிட்ட உணவு பரிமாறப்பட்டது. 

மாலை 4 மணி வரை அசன விருந்து நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. இதில் ஆலயத்தின் தலைவர் ஆயர் சாமுவேல் ஜான்சன், ஆயர் மணி, செயலர் திஜா டாலின், பொருளாளர் பொன்ராஜ், போதக சேகர உறுப்பினர் டாலின் மற்றும் பி.சி. உறுப்பினர்கள் மற்றும் டி.சி. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe