விளையாடி கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழப்பு...

published 1 year ago

விளையாடி கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழப்பு...

கோவை: கோவை சிங்காநல்லூர் பூச்சியம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(36). டிரைவர். இவரது மகன் நிசாந்த்(14). வரதராஜபுரத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நிசாந்த் தாத்தாவின் 5 வது நாள் இறுதிசடங்கு நிகழ்வு சீரநாயக்கன்பாளையம் அண்ணாநகர் 2வது தெருவில் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்து கொள்ள வசந்தகுமார் குடும்பத்துடன் அங்கு சென்றார். சிறுவன் நிசாந்த் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வலிப்பு ஏற்பட்டு சிறுவன் நிசாந்த் மயங்கி விழுந்தான். உடனே குடும்பத்தினர் சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாத்தாவின் இறுதிசடங்கில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe