கோவையி கஞ்சா விற்பனை கும்பல் சிக்கியது

published 1 year ago

கோவையி கஞ்சா விற்பனை கும்பல் சிக்கியது

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது செல்வபுரத்தில் உள்ள புதிய ஹவுசிங் யூனிட் அருகே சந்தேகம் படும்படி நின்றிருந்த 3 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சுசி முத்து செல்வன் (32), மதுக்கரை அறிவொளி நகரை சேர்ந்த பெயிண்டர்கள் கிருஷ்ணகுமார் (23), ஜெபாசன்(19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe