ஆதரவற்ற குழந்தைகளை டபுள் டக்கர் பஸ்ஸில் பயணம் செய்ய வைத்த கோவை விழா நிர்வாகிகள்- குழந்தைகள் மகிழ்ச்சி...

published 1 year ago

ஆதரவற்ற குழந்தைகளை டபுள் டக்கர் பஸ்ஸில் பயணம் செய்ய வைத்த கோவை விழா நிர்வாகிகள்- குழந்தைகள் மகிழ்ச்சி...

கோவை: கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது.  இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 8ம் தேதி இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.  இந்த பேருந்துக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பேருந்தில் கோவை மாநகருக்குள் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம்.  தினமும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர். இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.  இவர்களுக்கு கோவை  விழா நிர்வாகிகள் சாக்லேட் குடுத்து மகிழ்வித்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த
குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe