கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை

published 1 year ago

கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை

கொச்சி: கேரள மாநிலத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் என்பவரை ஒரு கும்பல் கடந்த 2021ம் ஆண்டு வீடு புகுந்து வெட்டியது.

ரஞ்சித் சீனிவாசனின் மனைவி, மகள் கண் முன்னையே நடந்த கொடூர கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஜான் கொலைக்கு பழிக்குப் பழியாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு கேரள மாநிலம் மாவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நவாஸ், ஷெமீர், நசீர் உட்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

கேரளாவில் ஒரே தீர்ப்பில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe