கோவையில் பால் பண்ணை ஊழியரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பு...

published 1 year ago

கோவையில் பால் பண்ணை ஊழியரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பு...

கோவை: கோவையில் பால் பண்ணை ஊழியரின் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(24). டிப்ளமோ படித்திருந்த இவர் கோவை கோவைப்புதூரில் தங்கியிருந்து பால் பண்ணை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் பால் சப்ளை செய்வதற்காக பால் பண்ணை உரிமையாளர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் இரவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகே உள்ள பைக் மீதும் தீ பரவியது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ அவர் மீது பிடித்தது. இதில் அவருக்கு கை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீ விபத்தில் காயமடைந்த ஜெகதீசனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அதற்குள் வாகனம் தீயில் முழுவதுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனம் வாங்க நினைப்போருக்கு இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக பல எலக்ட்ரிக் பைக்குகளும் இதேபோல் தீ விபத்தில் சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe