காதலை வானில் பறக்கவிட்ட கோவை கலைஞர்.!

published 1 year ago

காதலை வானில் பறக்கவிட்ட கோவை கலைஞர்.!

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஓவிய பட்டத்தை தயாரித்து வானில் பறக்கவிட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி ராஜா.

காதலர் தினம் நாளை 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பு கலைஞரான UMT ராஜா "காதல் வானிலே தன்னை மறந்து சிறக்கடிக்கும் காதலர்" என்பதை வலியுறுத்தும் வகையில் பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்க செய்துள்ளார்.

அதில் "தேடி செல்வதல்ல காதல் நம்மை நாடி வருவதே காதல்" என எடுத்துரைக்கும் வண்ணம் ஒரு பட்டத்தில் ஆண் ஒருவர் அன்பே வா வா! என்பது போலும் பெண் ஒருவர் அசடே போ போ என்பது போன்றும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

முன்னதாக ,யு.எம்.டி.ராஜா கமல்ஹாசனை முத்தத்தால் வரைந்து அவரிடம் பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe