பீளமேட்டில் பூங்கொத்து கடையில் திருட்டு...

published 1 year ago

பீளமேட்டில் பூங்கொத்து கடையில் திருட்டு...

கோவை: கோவை பீளமேட்டில் பூங்கொத்து விற்பனையகத்தில் புகுந்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை ஆவாரம்பாளையம் காமதேனு நகரை சேர்ந்தவர் கிஷோர் பாலாஜி(34). இவர் உணவகம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் ஆவாரம்பாளையம் கேஆர் புரத்தில் பூங்கொத்து விற்பனையகம் நடத்தி வருகிறார். இதனை அவரது மனைவி கவனித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். 

மறுநாள் காலை திறக்க வரும்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கல்லா பெட்டியில் இருந்த 1 1/4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9,500 ரொக்கம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe