திருமணம் செய்வதாக பழகி ரூ. 28 லட்சம் மோசடி பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு…

published 12 hours ago

திருமணம் செய்வதாக பழகி ரூ. 28 லட்சம் மோசடி பெண்ணை தாக்கிய வாலிபர் மீது வழக்கு…

கோவை: திருமணம் செய்வதாக பழகி ரூ. 28 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் 43 வயது பெண். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த மனோஜ்குமார்(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினர். திருமணம் செய்யாமல் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் மனோஜ்குமார் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அந்த பெண்ணிடம் தெரிவித்தார். 

இதனை நம்பி அந்த பெண்ணும் ரூ. 28 லட்சத்தை மனோஜ்குமாரிடம் கொடுத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பெண்ணை மனோஜ்குமார் திருமணம் செய்யவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், பணம் தருவதாக கடந்த 5ம் தேதி அந்த பெண்ணை மனோஜ்குமார் கோவை காந்திபுரம் வருமாறு தெரிவித்தார். அங்கு வந்த பெண்ணிடம் மனோஜ்குமார் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர் அவரை தாக்கி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இது குறித்து அந்த பெண் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மனோஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe