கணபதியில் வீட்டு வேலைக்கு சென்று நகை திருடிய பெண் கைது…

published 11 months ago

கணபதியில் வீட்டு வேலைக்கு சென்று நகை திருடிய பெண் கைது…

கோவை: கோவை கணபதி அத்திபாளையம் பிரிவை சேர்ந்தவர் மோகன்தாஸ்(61). இவரது தாயாரை கவனிக்க தங்கம் என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார். பின்னர் கடந்த 6ம் தேதி அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள்(43) என்பவரை வேலைக்கு சேர்த்தார். 

இதனைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி தங்கம் மீண்டும் அங்கு வேலைக்கு வந்ததால் கிருஷ்ணம்மாள் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டில் பீரோவில் இருந்த 2 1/2 பவுன் தங்க செயினை காணவில்லை. இது குறித்து மோகன்தாஸ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதில், கிருஷ்ணம்மாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நகையை திருடியது கிருஷ்ணம்மாள் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe