கோவையில் தீபாவளி நேரத்தில் ஏற்பட்ட தகராறு- தற்போது பலிவாங்கிய வாலிபர்கள்...

published 11 months ago

கோவையில் தீபாவளி நேரத்தில் ஏற்பட்ட தகராறு- தற்போது பலிவாங்கிய வாலிபர்கள்...

கோவை: கோவை குனியமுத்தூர் கங்காநகர் 4வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(29). இவர் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் பெரியசாமியுடன் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து பெரியசாமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ராஜீவ்(29) மற்றும் சந்திரன்(26) ஆகியோர் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். 

இதனால் அவர்களுக்கும், பெரியசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி மோதிக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெரியசாமி குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜீவ், சந்திரன் ஆகியோர் மீண்டும் பெரியசாமியுடன் தகராறில் ஈடுபட்டனர். 

இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி பெரியசாமியை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்த புகாரின் பேரில், போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராஜீவ், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe