கோவையில் பேசியபடி சென்ற கார் மெக்கானிக்கிடம் செல்போன் பறிப்பு...

published 11 months ago

கோவையில் பேசியபடி சென்ற கார் மெக்கானிக்கிடம் செல்போன் பறிப்பு...

கோவை: கோவை சின்ன வேடம்பட்டி அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (31). கார் மெக்கானிக். நேற்று இவர் கோவை காந்தி நகர் சாலை வழியாக செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த நபர் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து வேகமாக தப்பி சென்றனர். இது குறித்து பாலமுருகன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பறித்த நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe