தேர்தலில் போட்டியிடவில்லை... கமலஹாசன் அறிவிப்பு..!

published 11 months ago

தேர்தலில் போட்டியிடவில்லை... கமலஹாசன் அறிவிப்பு..!

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.

இதனிடையே அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும், கோவை தொகுதி கமலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த சூழலில், இன்று சென்னை அறிவாலயத்தில் கமல்ஹாசன் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மையத்திற்கு மாநிலங்களவையில் (ராஜ்யசபா) ஒரு சீட் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில்,  "நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடும் அதுவே. இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம்.  எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe