கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் வீடுகளில் 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு...

published 11 months ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் வீடுகளில் 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு...

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் வீடுகளில் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

கோவை இடையர்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(37). கார்பெண்டர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரமேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். உடனே அவர் கோவை வந்து வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன்(31). போட்டோகிராபர். இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.1.25 லட்சம் திருடு போயிருந்தது. இது குறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe