கோடை பாதிப்புகளை தடுக்கும் வழி? தமிழக அரசு விளக்கம்!

published 11 months ago

கோடை பாதிப்புகளை தடுக்கும் வழி? தமிழக அரசு விளக்கம்!

கோடைகால பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடையே கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிமுறைகள் பின்வருமாறு:

* உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

*பயணத்தின் போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்

* ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறு குடிக்க வேண்டும்.

* பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.

* முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள்

* நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

* மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

* வெளியே செல்லும் போது காலணிகளை அணியவும்.

* மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடையை கொண்டு செல்லவும்.

இந்த பயனுள்ள தகவலை உங்கள் குடும்பத்தார், சுற்றத்தாருக்கு பகிர்ந்து உதவிடுங்கள்…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe