கோவை கோர்ட்டுக்குள் போலி வக்கீல்கள் நுழைவதை தடுக்க க்யூ.ஆர்., ஸ்டிக்கர்!

published 11 months ago

கோவை கோர்ட்டுக்குள் போலி வக்கீல்கள் நுழைவதை தடுக்க க்யூ.ஆர்., ஸ்டிக்கர்!

கோவை: கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு க்யூஆர் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில் நீதிபதி சசிரேகா,  கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் வழக்கறிஞர்களின் சுய விவரங்கள் தெரிந்து விடும்.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், கடைகளில் விற்கக்கூடிய வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாங்கி கொண்டு வழக்கறிஞர்களாக இல்லாதவர்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும், இதனால் வழக்கறிஞர்கள் அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். 

இதனை தடுப்பதற்கு காவல்துறையிடம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணைந்து இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வழக்கறிஞர்களாக இல்லாதவர்கள் அவர்களின் வாகனங்களை நீதிமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நீதிமன்றத்தை சுற்றியோ வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொண்டு நிறுத்தி விட முடியாது என தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe