கோவை மக்களுக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி...! - அமைச்சர் ராஜா கிண்டல்!

published 11 months ago

கோவை மக்களுக்கு சுவையான ஆட்டு பிரியாணி ரெடி...! - அமைச்சர் ராஜா கிண்டல்!

கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக கூட்டணி வேட்பாளரான கணபதி ராஜ்குமாரின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இந்த அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

 

இக்கூட்டத்தில் பேசிய டிஆர்பி ராஜா இந்த தேர்தலில் திமுக வேட்பாளரை மகத்தான வெற்றி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பலவற்றை பேசினார். 

உரையின் இறுதியில், "தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போட வேண்டும் என்று சொன்னார்கள் இப்பொழுது தான் செய்தியில் வந்தது மட்டன் பிரியாணியாமே!, சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாக இருக்கிறது" என மறைமுகமாக கோவையில் பாஜக சார்பில் போட்டியிடக் கூடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சாடினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe