வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த கோவை திமுக வேட்பாளர்...

published 10 months ago

வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த கோவை திமுக வேட்பாளர்...

கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று கள்ளிமடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவக்கினார். அவருக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். 

 

அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட அவர் அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார்.

 

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் திமுக தொண்டர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் கருப்பு  சிவப்பு பலூன்களுடனும் திமுக கொடியுடனும் பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe