குடிபோதையில் இருந்த வாலிபர்களை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்...

published 10 months ago

குடிபோதையில் இருந்த வாலிபர்களை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்...

கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ரூபன்(19). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரூபன் வீட்டில் இருந்தார். 

அப்போது வீட்டு முன்பு 2 பேர் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தனர். இதனை பார்த்த ரூபன் அவர்களை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் கீழே கற்களை எடுத்து ரூபனை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ரூபனை மிரட்டி விட்டு சென்றனர். 

காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், குடிபோதையில் கல்லூரி மாணவரை தாக்கியது குனியமுத்தூர் சத்யா நகரை சேர்ந்த பெயிண்டர் ஹரிபிரசாத்(19), முகமத் அன்சாரி(19) என்பது தெரியவந்தது. 

போலீசார் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe